2வது பந்தில் அடி
ஆனால் மார்ஸ் லாம்பஷே பேட் செய்ய இரண்டாவது இன்னிங்சில் வந்ததும் ஆர்ச்சர் பந்துவீச்சில் 2வது பந்திலேயே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அவருக்கும் பலமான அடி ஹெல்மெட்டில் விழுந்தது.
சிறய பரிசோதனை
ஆனால் சின்ன பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் உடனே எழுந்து விளையாட தயாரானார். அதற்கான காரணத்தையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மன உறுதி இருந்தது
ஸ்மித்துக்கு பதிலாக பேட் செய்ய வரும் போது மிக மன உறுதியுடன் களத்திற்கு வந்தேன். ஆனால் 2வது பந்திலேயே பவுன்சர் மூலம் தாக்கப்பட்டு கீழே விழுந்தேன். ஆனால் உடனே எழுந்து கொண்டேன்.
காப்பாற்ற முடிவு
எனக்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் வர காரணம்.. ஸ்மித் தான். ஏற்கனவே ஸ்மித் அடிபட்டு விளையாட முடியாமல் உள்ளார். ஒரு பக்கம் அணியில் 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் அணியை காப்பாற்ற நினைத்தேன்.
அடியை மறந்தேன்
மேலும் அணியின் கேப்டன் என்னிடம் அதை மட்டுமே எதிர்பார்ப்பார் என்றும் தெரியும். எனவே அடிபட்ட சூழலை அப்படியே மறந்து விட்டு தொடர்ந்து பேட் செய்தேன்.
டிராவுக்கு உதவியது
அணியை டிராவை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் எனது மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த நினைப்பே என்னை அந்த நிகழ்வு இருந்து மீட்டது. மீண்டும் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்ய உதவியது என்றார்.