சிறு வயதில் காட்ஃபாதர்
சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த தெருவிற்கு 2 தெரு தள்ளி முன்னாள் ராணுவ வீரர் பி.டி.வாஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். எனது சிறு வயதில் காட்ஃபாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பள்ளி சீருடை, பள்ளிக் கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வாஷிங்டன்தான்.
விளையாட்டில் ஆர்வம்
மெரினா பீச்சில் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். வாஷிங்டன் தனது சைக்கிளில் என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்வார். கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். என்னையும் ஊக்கப்படுத்தியபடி இருந்தார். அவரால்தான் நான் படிக்கவும், சிறப்பாக விளையாடவும் முடிந்தது.
ஸ்ரீநிவாசன்
1999ம் ஆண்டு, வாஷிங்டன் இறந்தார். அந்த ஆண்டுதான் எனது மனைவி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பேறுகாலத்தின்போது எனது மனைவி பல சிரமங்களை சந்தித்தார். கடவுள் அருளால் குழந்தையும், தாயும் நலமாகினர். இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன்.
அந்த பெயர் சூட்டினேன்
ஆனால், பி.டி.வாஷிங்டன் மீதான அன்பால் பிறகு அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன். இப்படித்தான் வாஷிங்டன் சுந்தர் என்று எனது மகனுக்கு பெயர் வைக்கப்பட்டது என எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.