ஏதோ ஒருநாள்
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது. நாங்கள் செய்த தவறை சரி பார்ப்போம். ஆனால் என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு போட்டி எப்போதாவது நமக்கு நிகழும்.நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.
கவலைப்பட தேவையில்லை
ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தில் நீங்கள் எப்போதாவது விளையாட நேரிடும். எங்கள் அணி வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார். வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.
கடுப்பான சுந்தர்
இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே?
பொறுமை வேண்டும்
இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரே நாளில் 22 வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது. நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறோம்
அவரும் மனிதர் தானே
அர்ஷ்தீப் சிங் குறித்து குறை கூற விரும்பவில்லை. அவர் இந்தியாவுக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரும் ஒரு மனிதர் தானே எங்களுக்குள் போட்டி கடுமையாக இருக்கிறது. எதிரணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் உம்ரான் மாலிக் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு பந்து வீசுவார் என்று நம் அனைவருக்குமே தெரியும்.
திருத்தி கொள்வோம்
உம்ரான் மாலிக்கிடம் இருக்கும் திறமை தனித்துவமானது. எங்களுடைய அணி நிர்வாகம் மிகவும் பொறுமையாக இருக்கிறது. நாங்கள் எங்கள் தவறில் இருந்து திருத்திக் கொள்ளும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. இனி வரும் போட்டிகளில் நாங்கள் பலமான அணியாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. டேரல் மிட்செல் சிறப்பாக விளையாடி கூடுதல் ரன்கள் நியூசிலாந்து அணிக்காக சேர்த்தார். அவர் மட்டும் அடிக்கவில்லை என்றால் நியூசிலாந்து அணி 150 ரன்களுக்கு சுருண்டு இருக்கும் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.