ஓய்வு பெற்றார்
வாசிம் அக்ரம் 2002ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடமே ஒருநாள் போட்டியில் இருந்தும் ஒய்வு பெற்றார். பலரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த நிகழ்வு காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருந்தார்கள்.
விளையாடினார்
இந்த நிலையில் தற்போது 51 வயதில் இவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 14 வருடத்திற்குப் பின் இப்போதுதான் களம் இறங்கி உள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் உள்ள ஓர் அணியான முல்தான் சுல்தான் அணி நடத்திய போட்டியில் இவர் விளையாடி இருக்கிறார்.
ஜாலியான விளையாட்டு
இந்தப் போட்டி நட்பு ரீதியாக நடத்தப்பட்டது. பல நாட்கள் கழித்து ஆடியதால் மிகவும் சந்தோசமாக வாசிம் அக்ரம் ஆடினார். அதேபோல் இன்னும் அதே வேகத்துடன் கண்ணாடி அணிந்து பந்து வீசினார்.
|
விக்கெட் எடுத்தார்
முக்கியமாக எதிர் அணிக்காக விளையாடிய சோயப் மாலிக்கிற்கு கடினமான பந்துகள் வீசினார். பல பந்துகளை அவர் மிஸ் செய்தார். அவரைப் பார்த்து சிரித்துவிட்டு அடுத்த பந்திலேயே அவரை விக்கெட் எடுத்தார். இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.