என்சிஏவில் பயிற்சி
இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரில் மட்டுமே பங்கேற்றிருந்தார். ஆனால் அதிலும் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இதையொட்டி அவர் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
யூஏஇ பயணம்
அவர் தனது 70 சதவிகித பிட்னசை மட்டுமே நிரூபித்திருந்த நலையில், நேற்று முன்தினம் அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் அவர் தனது பிட்னசை நிரூபித்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இன்று தனது யூஏஇ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்
அவர் சிட்னியில் தனது குவாரன்டைனை முடித்த பின்பு அவருக்கு மீண்டும் டெஸ்ட் எடுக்கப்பட்டு, அதையடுத்தே அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மா தனது பிட்னசை நிரூபித்துள்ளதை அவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு முன்னாள் வீரர்களும் வரவேற்றுள்ளனர்.
மக்களுக்கு தெரியும்
சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாக பல்வேறு மீம்களும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் ரோகித் சர்மாவின் வருகையையொட்டி ஒரு மீமை வெளியிட்டுள்ளார். ஹிட்மேன் வருகை குறித்து மக்கள் அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.