ரோகித்தின் கம்பேக்
இந்தியாவின் வெற்றியை தாண்டி ரோகித் சர்மாவின் கம்பேக் தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 50 சர்வதேச இன்னிங்ஸ்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த அவர், 1100 நாட்களுக்கு பிறகு முதல் சதத்தை அடித்தார். இதுமட்டுமல்லாமல் முதல் இரண்டு போட்டிகளில் 31, 51 என சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.
வசீம் ஜாஃபர் புகழாரம்
இந்நிலையில் இனி பழைய ரோகித்தை பார்க்கலாம் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நியுசிலாந்து தொடரில் ரோகித் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதை பார்த்தேன். பழைய விண்டேஜ் ரோகித்தை பார்த்த போல இருந்தது. 50 ஓவர்களும் அதிரடி காட்ட முடியாது தான். ஆனால் அவரின் ஷாட் தேர்வுகள் மிகச்சிறப்பாக இருந்தன.
சாதாரணம் அல்ல
இது சிறிய மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என அமைந்த போதும், இஷ்டத்திற்கு சுழற்றாமல் சரியான கிரிக்கெட்டிங் ஷாட்களை ஆடினார்கள். ஓப்பனிங் வீரர்கள் ஓவருக்கு 9 - 10 ரன்கள் வரை அடித்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தால், அதே ரன்ரேட்டுடன் கடைசியில் முடிப்பது கடினம் ஆகும். அவர்களின் காம்போ பார்ப்பதற்கு நன்றாக உள்ளதாக வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.
அடுத்த தொடர் எப்போது?
இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் 16வது சீசன் வரும். எனவே இனி மே மாதம் தான் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.