இந்திய வீரர் குறித்து சிலாகிப்பு
பாகிஸ்தானின் மூத்த வீரர் ஜாகீர் அப்பாஸ் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து சிலாகித்து பேசியுள்ளார். வசீத் கானுடன் கிரிக்கெட் பாஸ் என்ற யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் சர்மாவின் ஆட்டம் பிடிக்கும்
இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும் துணை கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தையே தான் அதிகமாக ரசித்து பார்ப்பதாக ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
விராட்டிடம் இல்லை...
மைதானத்தில் எதிரணியினரின் பந்துகளை லாவகமாக கையாளும் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஸ்டைல் அழகானது என்று கூறியுள்ள ஜாகீர் அப்பாஸ், அவரது ஆட்டம் தனக்கு திருப்தியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஸ்டைல் விராட் கோலியிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
"டிவியை நிறுத்த மாட்டேன்"
இந்திய அணியின் முதுகெலும்பாக கேப்டன் விராட் கோலி திகழ்வதாகவும் ரோகித் மற்றும் விராட் கோலி ஆடும்போது தான் டி.வி.யை நிறுத்தாமல் பார்ப்பேன் என்றும் ஜாகீர் அப்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறந்த வீரர்கள் உருவாக்கம்
இந்திய அணி தற்போது சரியான தளத்தில் இயங்கிவருவதாக தெரிவித்த ஜாகீர் அப்பாஸ் இந்தியா எப்போதும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வருவதாக பாராட்டியுள்ளார்.
கவாஸ்கர்... சச்சின்... கோலி...
இந்தியாவில் எப்போதும் சிறந்த வீரர்கள் உருவாகி வருவதாக கூறிய ஜாகீர் அப்பாஸ், முதலில் சுனில் கவாஸ்கர், பிறகு சச்சின் டெண்டுல்கர் தற்போது விராட் கோலி என்று சிறந்த வீரர்கள் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மூத்த, இளம் வீரர்கள் இணைந்து செயல்
பாகிஸ்தானில் உள்ளதுபோல இல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும், வீரர்களுக்குள் பொறாமை இல்லாமல் மூத்த மற்றும் இளம் வீரர்கள் இணைந்து செயலாற்றுவதாகவும் ஜாகீர் மேலும் குறிப்பிட்டார்.