தயாராக உள்ளது இந்தியா
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணியின் வீரரான சாஹல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: எந்த அணியாக இருந்தாலும் எதிர்த்து விளையாட இந்தியா தயார்.
சமாளிக்க முடியும்
எந்த அணியில் எவ்வளவு பெரிய ஹிட்டர்கள் இருந்தாலும் கவலையில்லை. அதனை சமாளிக்க முடியும். ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் என்பது வேறு உலக கோப்பை போட்டிகள் மற்றும் அதன் அதன் அழுத்தம் என்பது வேறு.
தனித்தனி பிளான்
இங்குள்ள சூழ்நிலைகளை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ரசல் மாதிரியான எந்த அதிரடி வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு என தனித்தனியே பிளான்களை வைத்துள்ளோம். அதன்படி நாங்கள் களம் இறங்கி, ரன் குவிப்பை கட்டுப்படுத்துவோம்.
சாம்பியன் பட்டம்
மற்ற அணிகளிடம் இருப்பது போல அல்லாமல் வேறுபட்ட பவுலிங் பிளான் எங்களிடம் இருக்கிறது. ஆதலால் எந்த அணியையும் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.