மெல்போர்னில் நாளை துவக்கம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதையடுத்து நாளை மெல்போர்னில் இரு அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் துவங்கவுள்ளது.
ரஹானே கேப்டன்
இந்த போட்டியில் குழந்தை பிறப்பிற்காக விடுப்பு எடுத்துள்ள கேப்டன் விராட் கோலி, காயம் காரணமாக முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதிகமான அனுபவம் இல்லாத ரஹானே தலைமையின் கீழ் இந்திய அணி செயல்பட உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சாதகம்
இந்நிலையில், கோலி மற்றும் ஷமி இல்லாத இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிற்கு அதிகமான நெருக்கடியை நாளைய போட்டியில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா திட்டம்
நாளைய போட்டியில் வலிமையான துவக்கத்தை ஏற்படுத்த ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஒரு அணியின் சிறப்பான வீரர்கள் இல்லாதபோது அந்த அணி பலவீனமாக மாறும் என்பதை மறுக்க முடியாது என்றும் தற்போதைய சூழலில் இந்தியா அந்த நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.