பஞ்சாய் பறந்த பந்துவீச்சு
கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார்.
வென்றது பெங்களூரு
இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நாயகன் டி வில்லியர்ஸ்
இறுதிவரை ஆட்டமிழக்காமல் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி குறித்து கூறுகையில், இதற்கு நீண்ட காலமாக காத்திருந்தோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.
இது ஆரம்பம்
சரியான திசையில் அணி பயணிப்பதற்கான முதல் படி தான் இந்த வெற்றி. இதே நிலையை வரும் போட்டிகளிலும் நீங்கள் பார்க்கலாம். கடந்த 11 மாதங்களாக நான் கிரிக்கெட் ஆடவில்லை.
சாத்தியமானது
அதனால் சில போட்டிகளில் நான் தடுமாறினேன். கடும் பயிற்சிகளால் சாத்தியம் ஆனது. வெற்றியை நிச்சயம் தொடர்ந்து தக்க வைப்போம் என்றார்.