பாராட்டு விழா
தற்போது தோனி, தாயகம் திரும்புவதால் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது இந்த விழா வரும் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் தற்போது கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பங்கேற்கும் வீரர்கள்
இந்த விழாவில் சென்னை அணி கேப்டன் தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, சர்துல் தாக்கூர் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரசிகர்களுக்கும் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மம்தா வழியில் ஸ்டாலின்
ஏற்கனவே ஐ.பி.எல்.கோப்பையை கொல்கத்தா அணி வென்ற போது ஷாரூக்கான் , மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்பு பாராட்டு விழா நடத்தி இருந்தார். இதனை பின்பற்றி தற்போது சென்னை அணிக்கும் பாராட்டு நடத்தப்பட உள்ளது. காவிரி பிரச்சினை, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் நடைபெறாமல் இருந்தது. இதனால் சென்னை அணியை தமிழக ரசிகர்கள் பிரிந்து வாடி இருந்தனர். தற்போது சென்னையில் இந்த பாராட்டு விழா நடத்தப்படுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரியா விடை?
இந்த பாராட்டு விழாவில் ஐ.பி.எல்.தொடரில் தமது எதிர்காலம் குறித்து தோனி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை, தமிழக ரசிகர்கள் முன் கிரிக்கெட்டுக்கு தோனி பிரியா விடை அளிக்க உள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. கிரிக்கெட்டின் தலயும், அரசியலின் தளபதியும் ஒரே மேடையில் அமர உள்ளது இருவர்களின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.