டிசம்பர் 6ல் துவக்கம்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி துவங்கவுள்ளது. இதில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மோதவுள்ளது.
இந்தியா தொடரில் ஆட மறுப்பு
இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ள தொடரில் விளையாட தேர்வாளர்கள் தன்னிடம் கேட்டதாகவும் ஆனால், தான் விளையாட போவதில்லை என்றும் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிவரை நோ விளையாட்டு
அடுத்த ஆண்டில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து தான் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதனால் இந்த ஆண்டு இறுதிவரை தான் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
தேர்வாளர்கள்மீது கிறிஸ் கெய்ல் குற்றச்சாட்டு
தன்னை இளைஞர்களுடன் விளையாடுமாறு மேற்கிந்திய தீவுகளின் தேர்வாளர்கள் தன்னிடம் கூறுவதாகவும் ஆனால் தான் தற்போது ஓய்வு எடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் பங்கேற்க மறுப்பு
இதேபோல ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பாஷ் லீக்கிலும் தான் விளையாட மாட்டேன் என்று கிறிஸ் கெய்ல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் அதிருப்தி
அபுதாபியில் நடைபெற்றுவரும் மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் 6 போட்டிகளில் 101 ரன்களை மட்டுமே அடித்து ஜோஸி ஸ்டார்ஸ் அணியின் அதிருப்திக்குள்ளாகியுள்ள கிறிஸ் கெய்ல், ஓரிரு போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் நமக்கு மரியாதை இருக்காது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.