For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடிய கெய்ல், லீவிஸ் கூட்டணி..! ஏன் இப்படி? குழம்பிய இந்திய அணி..!

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், கையில் கருப்பு பட்டையுடன் கெயில் மற்றும் லீவிஸ் சோகமாக விளையாடி உள்ளனர்.

இந்தியா தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3வது ஒருநாள் போட்டியில் துவங்கி, பின்னர் மழை காரணமாக சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது.

West Indies players with black band in 3rd odi against India

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கெயில் மற்றும் லீவிஸ் ஆகியோர் கையில் கருப்பு பட்டையுடன் வந்தனர்.

ரசிகர்களும், இந்திய அணியினரும் இதை கண்டு தொடக்கத்தில் குழப்பம் ஆகினர். என்ன என்று தெரியாமல் சற்று நேரம் தடுமாறினர். அப்படி அவர்கள் கையில் கருப்பு பட்டையுடன் விளையாட வந்ததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான லீவிசின் பாட்டி காலமாகி விட்டார். அவர்களின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கருப்பு பட்டையுடன் விளையாட வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 15, 2019, 6:31 [IST]
Other articles published on Aug 15, 2019
English summary
West Indies players with black band in 3rd odi against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X