துபாய்: இந்திய அணிக்கு எதிராக 2வது டெஸ்டில் விளையாடிய பிராத்வைட்டின் பவுலிங்கில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. தொடரை இந்திய அணி 2க்கு 0 என்று கைப்பற்றியது. அந்த தொடரின் 2வது போட்டியில், 2வது போட்டியில் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரெய்க் பிராத்வொய்ட் பவுலிங்கில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பிராத்வைட் பந்துவீச்சில் சந்தேகம் என்பது முதல் முறையல்ல. 2017ம் ஆண்டில் இங்கிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்த குற்றச்சாட்டு எழுப்பப் பட்டது. ஐசிசி நடத்திய சோதனையில் தவறில்லை என்று நிரூபித்தார் பிராத் வொய்ட்.
1 மாதத்துக்கு பின் மீண்டும் பந்துவீச அவருக்கு அனுமதி வழங்கப் பட்டது. வரும் 14ம் தேதி நடக்கும் தேர்வில் பிராத் வொய்ட் தேர்வாக வேண்டும். ஆனால் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில் தற்போது பிராத்வொய்ட் பவுலிங் செய்ய எவ்வித தடையும் இல்லை.
இந்திய தொடரில் பிராத்வொய்ட் மொத்தமாக 9 ஓவர்கள் வீசினார். ஜமைக்கா டெஸ்டில் 2 ஓவர்கள் வீசி, இஷாந்த் ஷர்மா விக்கெட்டை காலி செய்தார். இதுவரை சர்வதேச டெஸ்ட் அரங்கில் மொத்தமாக 37 இன்னிங்சில் பந்துவீசி, ஒரு 6 விக்கெட் உட்பட 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.