ரிசர்வ் டேயில் போட்டி
அவர்களுக்கு விடைசொல்லத்தான் இந்த பதிவு. சரி... அரையிறுதிப் போட்டியின் போது மழை பெய்தால் ரிசர்வ் டே என்று அழைக்கப்படும் மாற்று தினத்தில் போட்டியை நடத்த ஐசிசி அனுமதி தரும். அப்படியே போட்டியை மாற்றி வைத்தும் அன்று மழை பெய்தால் என்ன செய்வது?
இறுதிப்போட்டிக்கு தகுதி
அதற்கும் விடை இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் யார் கால் இறுதி சுற்று வரை முதலில் இருந்தாரோ அந்த அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இறுதி போட்டியில் மழை பெய்தால் மீண்டும் நடத்த ரிசர்வ் டே அளிக்கப்படும்.
பகிரப்படும்
அப்படி ரிசர்வ் தினத்திலும் இறுதி போட்டியின்போது மழை பெய்தால் உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். அது போன்ற சம்பவம், உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்ததே இல்லை.
கவலையில் ரசிகர்கள்
ஆனால் இந்த முறை நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என்பது ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு. காரணம் பல முக்கிய போட்டிகள் இதுவரை மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதியில் நிறுத்தப் பட்டிருக்கின்றன. எனவே, அரையிறுதி மற்றும் இறுதி போட்டியை போன்று மழையை பற்றியும் ரசிகர்கள் ஆர்வமுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.