இந்தியா ஏ அணியில் தோனி
2004ஆம் ஆண்டு தான் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். பீகார் அணியில் முதலில் ஆடி வந்தார் தோனி. அப்போது தேர்வுக் குழுவினரின் பார்வையில் பட்டார். அதன் பின் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றார்.
தேர்வு செய்யப்பட்ட தோனி
பாகிஸ்தான் ஏ, கென்யா ஏ அணிகளுடனான முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணி சார்பாக ஆடிய தோனி சிறப்பாக ஆடி இருந்தார். அதன் மூலம், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இருந்ததால் கங்குலி தோனியை தேர்வு செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
விமானத்தில்..
தோனியின் முதல் தொடர் வங்கதேச கிரிக்கெட் தொடர் தான். அப்போது இந்திய அணி வங்கதேசம் செல்ல தயாராக விமானத்தில் அமர்ந்து இருந்த போது கேப்டன் கங்குலி, ஜோய் பட்டாச்சாரியாவிடம் தோனி குறித்து பேசி உள்ளார்.
சாட்டையடி பேட்ஸ்மேன்
இன்னும் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட ஆடி இராத நிலையில் தோனியை சுட்டிக் காட்டி "எங்களிடம் ஒரு சாட்டையடி பேட்ஸ்மேன் இருக்கிறார்" என பெருமையாக சுட்டிக் காட்டி இருக்கிறார் கங்குலி. அப்போதே தோனியை பற்றி சரியாக கணித்துள்ளார் கங்குலி.
கங்குலி கணிப்பு
மேலும், இவரை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். தோனி பெரிய நட்சத்திரமாக மாறப் போகிறார் எனவும் ஜோய் பட்டாச்சாரியாவிடம் கூறி உள்ளார். கங்குலி சொன்னது பின்னர் அப்படியே உண்மை ஆனது. தோனி பெரிய கிரிக்கெட் ஜாம்பவானாக மாறினார்.
தனி இடம்
கங்குலி பல வீரர்களை அடையாளம் கண்டார். வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கானம் ஹர்பஜன் சிங் என இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் அவரால் அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். அவர்களில் தோனிக்கு தனி இடம் உண்டு.
சதம்
தோனி தன் முதல் தொடரான வங்கதேச தொடரில் படு மோசமாகவே ஆடினார். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். அடுத்து நடந்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் சாட்டையடி சதம் அடித்து மிரள வைத்து அணியில் தன் இடத்தை தக்க வைத்தார் தோனி.