ஆரம்பமே பேரிடி
ஆனால், அதெல்லாம் தவிடுபொடியானது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஆரம்பமே பேரிடி. ஹிட்மேன் ரோகித் 1 ரன்னில் அவுட். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி நிதானமாக விளையாடினார்.
விஜய் சங்கர்
கே.எல்.ராகுல் 30 ரன்களில் அவுட்டாக, யாரும் எதிர்பாரக்காத வகையில் 4வது வீரராக விஜய் சங்கர் களமிறங்கினார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம். இருந்தும் சோபிக்கவில்லை. ஒற்றை இலக்கங்களில் ரன்களை கொண்டு வந்து சேர்த்தார்.
வந்தார் தோனி
அவர் சந்தித்து 52 பந்துகள் (அதுவும் ஒரு கத்துக்குட்டி அணியுடன்) எடுத்ததோ 28 ரன்கள். எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று வந்த தோனி பொறுப்புடன் விளையாடுவதாக நினைத்து ரசிகர்களின் பொறுமையை இழக்க வைத்தார்.
28 ரன்கள் எடுத்தார்
கோலியும் 67 ரன்களில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். விக்கெட்களை இழந்த நிலையில் ரன்குவிக்க தடுமாறிய தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
ஏமாந்த ரசிகர்கள்
கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியால் ஜெட் வேகத்தில் ரன் சேர்ப்பார் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 7 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 52 ரன்கள் எடுத்தார்.
சொதப்பல்
இந்திய அணியின் ஓபனிங் சரியில்லாமல் போனது மிகப்பெரிய பின்னடைவு. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிக்கு ராகுல், ரோகித் ஓப்பனிங்கே முக்கிய காரணம். ஆப்கனுக்கு எதிரான போட்டியில் ஓபனிங் சொதப்பினாலும் பின் வரிசை வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவே ஆடினர்.
நெருக்கடி தரவில்லை
எந்த வீரரும் ரன்களை குவிக்க வேண்டும், எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட வில்லை. குறிப்பாக, 4வது வீரராக களமிறங்கிய விஜய் சங்கருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை அம்போவென்று தவறவிட்டார்.
திணறியது ஆச்சர்யம்
பலமான பேட்டிங் லைன் அப் கொண்டிருக்கும் இந்தியா, கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் திணறியது ஆச்சர்யமாகவே இருந்தது. நடப்பு தொடரில் கேப்டன் கோலி, ரோகித் சர்மாவை தவிர எந்த வீரரும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர். ஆப்கனுக்கு எதிரான போட்டி போல் இந்திய அணி அடுத்து வரக்கூடிய போட்டிகளில் பேட்டிங் சொதப்பினால் உலகக் கோப்பை கனவு காலியாக விடும் என்பது தான் ரசிகர்கள் சொல்லும் சேதி.