தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம்
அதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக கூறி உள்ளார் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் மதன் லால். சச்சின் தன் தனிப்பட்ட ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால் தான் அவரால் அணியை சரியாக கவனிக்க முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
இரண்டு முறை கேப்டன்
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு இரண்டு முறை கேப்டனாக சிறிது காலம் பணியாற்றினார். ஆனால், இரண்டு முறையும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதன் பின் சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை.
ஒதுங்கிக் கொண்ட சச்சின்
மீண்டும் 2007இல் ஒரு வாய்ப்பு வந்த போதுகூட அவர் தோனியை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டார். அந்த அளவுக்கு கேப்டன்சிக்கும், அவருக்கும் ஒத்துப் போகவில்லை. கேப்டன்சி வேண்டாம் என ஒதுங்கும் அளவுக்கு என்ன நடந்தது? இது பற்றி 1996-97இல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் மதன் லால் பேசி உள்ளார்.
ஒப்புக் கொள்ள முடியாது
சச்சின் டெண்டுல்கர் சிறந்த கேப்டன் இல்லை என ஒரு விமர்சனம் உள்ளது. அதைப் பற்றி பேசிய மதன் லால், அவர் சிறந்த கேப்டன் இல்லை எனக் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்றார். மேலும், அவரால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என விளக்கினார்.
மிகவும் சிரமப்பட்டார்
"சச்சின் அவரது தனிப்பட்ட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தினார். அணியை கவனிக்க மிகவும் சிரமப்பட்டார். ஏனெனில், ஒரு கேப்டனாக நீங்கள் உங்கள் செயல்பாட்டை மட்டும் பார்க்க முடியாது. மற்ற பத்து வீரர்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை பெற வேண்டும்." என்றார் மதன் லால்.
கேப்டன்சி ரெக்கார்டு
சச்சின் 25 டெஸ்ட் போட்டிகளிலும், 73 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 9 தோல்விகள், 12 டிரா செய்துள்ளார். 73 ஒருநாள் போட்டிகளில் வெறும் 23 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் அரங்கில்..
சர்வதேச அரங்கில் சறுக்கினாலும், ஐபிஎல் அரங்கில் ஓரளவு சிறப்பான கேப்டன்சி ரெக்கார்டை வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் கோப்பை வெல்லாவிட்டாலும் 55 போட்டிகளில் 32 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் சச்சின்.