யார் எந்த இடத்தில் உள்ளனர்
13 ஆட்ங்களில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா உள்ளது. ராஜஸ்தான் ராயல் 13 ஆட்டங்களில் 12 புள்ளுகளைப் பெற்றுள்ளது. பஞ்சாப் 12 ஆட்டங்களில் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் 12 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் உள்ளன.
5 அணிகளுக்கும் வாய்ப்பு
தற்போதைய நிலையில் இந்த ஐந்து அணிகளுக்குமே பிளே ஆப் சுற்று முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த நடக்கும் ஆட்டங்களின் முடிவைப் பொருத்தே யார் முன்னேறுவர் என்பது தெரியும் அளவுக்கு புள்ளி விபரங்கள் குழப்பத்தில் உள்ளன.
நிலைமை மாறியது
சீசனின் துவக்கத்தில் அதிரடியாக வெற்றிகளை குவித்து வந்தது பஞ்சாப் அணி. ஆனால் பின்னர் நிலைமை மாறியது. கடைசியாக மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், சீசனின் துவக்கத்தில் படு தோல்விகளை சந்தித்தது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்,. கடைசி கட்டத்தில் வெற்றிகளை குவித்து வருகிறது.
பஞ்சாபுக்கு சிக்கல்
மும்பையில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பொலார்டு அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். பஞ்சாபின் ஆன்ட்ரூ டை 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. லோகேஷ் கடுமையாக போராடி 94 ரன்கள் எடுத்தார். மும்பையின் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு மும்பை முன்னேறியது. தனது வாய்ப்பை பஞ்சாப் சிக்கலாக்கி கொண்டது.