பெஷாவர்: ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் மறக்க முடியாத அனுபவம்தான். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சில விஷயங்களை சீக்கிரம் மறக்க முடியாது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் மோதியபோது போட்டி முழுவதும் மழை அவ்வப்போது வந்து கெடுத்தது. ஆனாலும் ஆட்டம் தொடர்ந்த்து. இந்தியா அபார வெற்றியும் பெற்றது. அந்தப் போட்டியில் இரண்டு சமாச்சாரங்கள் மக்களைக் கவர்ந்தன.
ஒன்று விஜய் மல்லையா வந்து போட்டியைப் பார்த்து ரசித்தது. 2வது, இந்திய - பாகிஸ்தானிய தம்பதி போட்டியைப் பார்த்த புகைப்படம் வைரல் ஆனது.
Hey Pakistan @TheRealPCB Get Ready Your Daddy INDIAN Team and This Legend Man😂 is Coming again to Bang You On Sunday FINAL 😈#INDvsPAK #CT17 pic.twitter.com/erU2PvNsVD
— Shehryar Khan (@Pathan_007_) June 15, 2017
அந்தத் தம்பதியில் ஆண் இந்தியர், பெண் பாகிஸ்தானியர். இவர்கள் இருவரும் தத்துமது தேசிய அணிக்கு ஆதரவாக போட்டியைப் பார்த்து ரசித்தது வித்தியாசமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த இரு அணிகளும் மோதவுள்ளதால் மறுபடியும் இவர்கள் நிச்சயம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மொத்த ரசிகர்களும் காத்துள்ளனர்.
வந்துருவீங்கதானே பாஸ்!?