அதிரடி ஆர்சிபி
ஐபிஎல் 2021 தொடரின் முக்கிய அணியாக மாறியுள்ளது ஆர்சிபி. கடந்த தொடரில் இருந்தே தனது அதிரடியை காட்டத் துவங்கியுள்ளது. கடந்த தொடரில் ப்ளே-ஆப் சுற்றிற்கு முன்னேறிய ஆர்சிபி, எஸ்ஆர்எச் அணியுடனான எலிமினேட்டர் சுற்றில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.
சிறப்பான பங்களிப்பு
அந்த அணியின் நட்சத்திர வீரரராக ஏபி டீ வில்லியர்ஸ் உள்ளார். கடந்த 2008 முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் டீ வில்லியர்ஸ் ஆர்சிபியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு சீசனிலும் அந்த அணிக்கான தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.
76 ரன்களை குவித்த டீ வில்லியர்ஸ்
நேற்றைய தினம் ஆர்சிபி அணிக்காக விளையாடிய டீ வில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்களை குவித்திருந்தார். கேகேஆர் அணியை ஆர்சிபி வீழ்த்த இந்த ரன்கள் முக்கிய காரணமாக அமைந்தன. இந்நிலையில் ஆரஞ்சு கேப்பிற்கான போட்டி குறித்து தான் அதிகமாக கவலைப்படுவதில்லை என்று டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கியமில்லை -டீ வில்லியர்ஸ்
ஆரஞ்சு கேப்பை பெற வேண்டுமென்றால், முதல் 3 இடங்களில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் ஆனால் தான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பது குறித்து கவலை கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரஞ்சு கேப் முக்கியமானதில்லை என்றும் கூறியுள்ளார்.
முக்கிய பொறுப்பு
அணிக்காக போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது மட்டுமே தனக்கு முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு அணியில் முக்கியமான பொறுப்பை அளித்துள்ளதாகவும் அதுகுறித்து தொடர்ந்து தன்னிடம் அணி நிர்வாகம் பேசி தன்னை தெளிவாக வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.