18 கோடி பேர்
சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உலகக் கோப்பையை, உலகெங்கும், 18 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன், 2013ல் நடந்த போட்டியைவிட, பார்வையாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவை விட
தென்னாப்பிரிக்காவில், எட்டு மடங்கு அளவுக்கு மக்களை டிவி முன் கட்டிப் போட்டது இந்த போட்டி. இது உண்மைதான். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டது இந்த உலகக் கோப்பை போட்டி.
இந்தியாவில் மட்டும் 15.6 கோடி
இந்தியாவில், 15.6 கோடி மக்கள், பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளை பார்த்துள்ளனர். இதில், 8 கோடி பேர் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பைனலை மட்டும், ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, 12.6 கோடி பேர், நகத்தை கடித்தபடி பார்த்துள்ளனர். இந்தியாவில் மட்டும், 5 மடங்கு பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
மிதாலிக்கு நன்றி
கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான, நமது கிரிக்கெட் அணி, இந்த உலகக் கோப்பையில், தரவரிசையில், முதல் மூன்று இடங்களில் உள்ள, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வென்றது. இதன் மூலம், இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் மீது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.