மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்களில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுல்ளது.
அலீம்டார்-பாகிஸ்தான், பில்லி பவுடன்-நியூசிலாந்து, புருஸ் ஒக்ஸ்போர்ட்-ஆஸ்திரேலியா, இயன் குல்ட்-இங்கிலாந்து, குமார் தர்மசேனா-இலங்கை, மராய்ஸ் எராமுஸ்-தென் ஆப்பிரிக்கா, நிகல் லியாங்க்-இங்கிலாந்து, பவுல் ரெய்பெல்-ஆஸ்திரேலியா, ரிச்சர்ட் இலிங்வொர்த்-இங்கிலாந்து, ரிச்சர்ட் கெட்லபோரா-இங்கிலாந்து, ராட் டக்கர் மற்றும் ஸ்டீவ் டேவிஸ்-ஆஸ்திரேலியா. இவர்களே அம்பையர் குழுவில் உள்ளவர்களாகும். இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.ரவி மட்டும் அம்பையராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் சர்வதேச பேனல் அம்பையர் பொறுப்பில் இருப்பார்.