டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் ஆட தன்னை தயார் செய்து வருகிறது.
அந்த "பிசி"யான நிலையிலும், இந்திய அணியின் கேப்டன் கோலி, மறக்காமல், தேர்தலில் வென்ற பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் மோடி தலைமையில் இயங்கும் ஆளும் பாரதிய ஜனதா அரசு பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
முளைச்சு மூணு இல்லை விடலை.. அதுக்குள்ள ஈகோ!! இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்!
வெற்றி பெற்ற மோடிக்கு கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்து போட்ட ட்விட்டர் பதிவில், "வாழ்த்துக்கள் நரேந்திர மோடிஜி! உங்கள் பார்வையில் இந்தியா புதிய உயரங்களை தொடும் என நம்புகிறோம்" எனக் கூறி கடைசியாக "ஜெய் ஹிந்த்" என சல்யூட் அடித்திருந்தார்.
https://twitter.com/imVkohli/status/1131823451755425792
விராட் கோலி தவிர, சச்சின் டெண்டுல்கர், சேவாக், அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஷிகர் தவான் என பல கிரிக்கெட் பிரபலங்களும் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளனர்.