மும்பை : இந்திய அணி மே 30 முதல் துவங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்திய அணியின் இளம் வீரர் சாஹல், உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எந்த அணிகள் கடும் போட்டி அளிக்கும் என்பது குறித்து தன் கருத்தை கூறினார்.
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்தியா நிச்சயம் அரையிறுதி வரை செல்லும் என பல முன்னாள் வீரர்களும் கூறி உள்ளனர்.
இளம் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் அணியில் ஒரு அங்கம் என்பதால் ஒரு படி மேலே போய், இந்தியா தான் நம்பர் 1 என்று கூறி இருக்கிறார். இவர் எப்போதும் தன் பேட்டியில் தோனி, கோலி பற்றி பேசாமல் இருக்கமாட்டார். இப்போதும் அப்படியே!
டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்துக்கு பேட்டி அளித்த சாஹல், இந்தியா தான் நம்பர் 1 அணி. வலிமையான, சம பலம் கொண்ட அணி நம்மிடம் உள்ளது. அதை தவிர்த்து இங்கிலாந்து அணி வலுவாக உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் கடும் போட்டி போடும். விராட் கோலி, தோனி இருப்பதால் இந்திய அணிக்கு தான் உலகக்கோப்பையில் வாய்ப்பு அதிகம் என்றார்.
இப்ப விட்டா அப்புறம் நேரமே கிடைக்காது.. அனுஷ்காவுடன் கோவாவுக்கு ஜாலி டூர் கிளம்பிய கோலி!!