திணறல்
இலங்கை அணி கடந்த ஒரு வருடமாக சரியான கேப்டன் கிடைக்காமல் திணறி வருகிறது. சங்கக்காரா, ஜெயவர்தனே ஆகிய மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர், இலங்கை அணிக்கு ஓரளவு நிலையாக கேப்டன் பதவியில் இருந்தவர் ஆஞ்சலோ மேத்யூஸ்.
குழப்பத்தில் இலங்கை
அவர் ஆசிய கோப்பை தொடர் தோல்விக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் ஒவ்வொரு தொடருக்கும் புதிய கேப்டனை நியமித்து குழப்பத்தில் இருந்தது இலங்கை கிரிக்கெட் போர்டு.
தொடர்ந்து தோல்வி
கடைசியாக இலங்கை அணியின் மூத்த வீரரான வேகப் பந்துவீச்சாளர் மலிங்காவை கேப்டனாக நியமித்தது. அதுவும் சரிவரவில்லை. அவரது தலைமையில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது இலங்கை அணி.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரில் நன்றாக ஆடிய கருணாரத்னேவை தேர்வு செய்துள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு யாராவது நான்கு ஆண்டுகளாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடாத வீரரை கேப்டனாக நியமிப்பார்களா? என கிரிக்கெட் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
முக்கிய காரணம் என்ன?
இலங்கை கிரிக்கெட் போர்டு இவரை தேர்வு செய்ய முக்கிய காரணம், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை முதல் முறையாக 0-2 என கைப்பற்றி ஆசிய அளவில் சாதனை செய்த இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்தவர் கருணாரத்னே.
டெஸ்ட் வீரர்
எனினும், டெஸ்ட் வீரரை உலகக்கோப்பை ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்கச் செய்வது எந்த வகையில் உதவும் என தெரியவில்லை. இவரது தலைமையில் மலிங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ் போன்ற அனுபவ வீரர்கள் ஆடவுள்ளனர்.