அம்பதி ராயுடு நீக்கம்
இந்திய அணியில் நான்காவது இடத்தில் பேட்டிங் ஆட அம்பதி ராயுடு தான் சரியான வீரர் என்ற நிலை, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு வரை இருந்தது. ஆனால், அந்த தொடரின் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனக் கூறி அவரை நீக்கியது தேர்வுக் குழு.
|
ராயுடு கிண்டல்
அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை அணியில் தேர்வு செய்தனர். விஜய் ஷங்கர் முப்பரிமான திறன் கொண்டவர் என தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறி இருந்தார். அதை வைத்தே விஜய் ஷங்கரை கிண்டல் செய்திருந்தார் அம்பதி ராயுடு.
|
ஓஜா கருத்து
இதை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓஜா, "ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களின் கவனிக்கத்தக்க நிலை.. இதே நிலையில் நானும் இருந்துள்ளேன்." என ராயுடு நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் வீரர்கள் நிலை
அம்பதி ராயுடு, ஓஜா இருவரும் ஹைதராபாத் மாநில அணிக்காக ஆடியவர்கள் என்பதை வைத்து, ஹைதராபாத் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார் ஓஜா. பல ஆண்டுகளுக்கு முன்பு விவிஎஸ் லக்ஷ்மனுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், இது போன்ற சர்ச்சை எழுந்தது.
உண்மை இல்லை?
ஆனால், ஓஜா பதிவை பார்த்த பலரும், ஓஜா தன் நண்பருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதில் உண்மை இல்லை என்றே கருத்து கூறியுள்ளனர். சிலர் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஹைதராபாத்தை சேர்ந்தவர் தான் என கூறியுள்ளனர்.