விளையாடக்கூடாது
புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது. அப்படி நடந்தால் இந்திய மக்கள் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் கம்பீர்.
அப்ரிடி கருத்து
கம்பீர் இப்படி சொன்னதை, பாகிஸ்தான் நாடு செய்தியாளர் ஒருவர் அப்ரிடியிடம் கூறி அதற்கு உங்கள் கருத்து என்ன என கேட்டுள்ளார். அதைக் கேட்ட அப்ரிடி, தன் ஆதர்ச பகையாளியான கம்பீரை திட்டித் தீர்த்தார். அப்படி என்ன திட்டினார்?
படித்தவர்கள் பேச்சா?
"படித்தவர்கள் இப்படி தான் பேசுவார்களா? கெளதம் இதை பேசும் போது தன் அறிவை பயன்படுத்தி இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு படித்த, விஷயம் அறிந்த ஒருவர் இப்படித்தான் பேசுவாரா?" என விளாசினார் அப்ரிடி.
மக்களையும் சீண்டினார்
அது மட்டுமில்லாமல், தேர்தலில் கம்பீர் வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டு, "அவர்கள் அறிவே இல்லாத ஒருவருக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள்" என்று கம்பீருக்கு ஓட்டுப் போட்ட மக்களையும் சீண்டினார் அப்ரிடி.
பைத்தியம்
அப்ரிடி தன் சுயசரிதையில் கம்பீர் குறித்து தெரிவித்த மோசமான கருத்துக்களை ஒட்டி, கடந்த மாதம், இருவரும் "தர லோக்கலாக" இறங்கி ஒருவரை ஒருவர் பைத்தியம் என மாற்றி, மாற்றி திட்டிக் கொண்டனர்.
பதிலடி கொடுப்பாரா?
ஆனால், கம்பீர் தற்போது எம்பி-யாகி இருக்கும் நிலையில், அப்ரிடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பாரா? அல்லது அரசியல்வாதி ஆகி விட்டதால் அடக்கி வாசிப்பாரா? என்பதை பார்க்க வேண்டும்.