கோஹ்லி பதிலடி
ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி தரும் விதமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் செய்தி இணையதளம் ஒன்றுக்கு விராட் கோஹ்லி சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உலக கோப்பையில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவை இப்போது அடிக்காவிட்டால் எப்போதுதான் அடிக்க முடியும்..
அர்த்தமே அதில்தான் உள்ளது
தொடர்ந்து 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் அடித்து நொறுக்கி வெற்றி பெற்றால்தான், இத்தனை நாட்களாக விளையாடியதற்கே அர்த்தம் கிடைக்கும்.
பவுலர்களின் பங்களிப்பு
இந்திய அணி திடீரென மேம்பட காரணம், பவுலர்களின் பங்களிப்புதான். 7 போட்டிகளிலுமே எதிரணிகளை ஆல்-அவுட் செய்துள்ளோம் என்றால், எங்களது பந்து வீச்சாளர்களின் திறமைதான் அதற்கு காரணம்.
ஆக்ரோஷம்
எங்களது பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன், ஆக்ரோஷமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
திட்டம் போட்டு தூக்குறோம்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததுமே, உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகியது. குறுகிய தினங்களே இருந்த நிலையிலும், அணி சிறப்பாக தயாராகியது. எனவேதான், எங்களால் சிறப்பாக ஆட முடிகிறது. இவ்வாறு கோஹ்லி கூறினார்.