புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அமைய உள்ள இந்த புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் சுமார் 75,000 இருக்கைகளுடன் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. உலகத்தரமான அளவில், நவீன வசதிகளுடன் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் அமையும் என கூறப்படுகிறது.
நவீன வசதிகள்
பெரிய பெவிலியன் ஸ்டான்ட், கார்ப்பரேட் பாக்ஸ், நவீன கிளப் ஹவுஸ், இன்டோர் கேம்ஸ்-க்கான அனைத்து வசதிகள் உட்பட பிரம்மாண்டமான முறையில் இந்த ஸ்டேடியம் தயாராக உள்ளது. இதற்கான திட்டமிடலை செய்து முடித்துள்ளது ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
100 ஏக்கர்
நூறு ஏக்கரில் அமைய உள்ள இந்த மைதானம், ஜெய்ப்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்ப் கிராமத்துக்கு அருகே இடம் பெற உள்ளது. இன்னும் நான்கு மாதங்களில் இதற்கான பணிகள் துவங்க உள்ளன. இன்னும் பல வசதிகள் குறித்து நிர்வாகி ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
மற்ற வசதிகள்
ஐசிசி விதிகளின் படி மின்விளக்குகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவிற்கு நவீன அறைகள், 4000 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் இடம், இரண்டு ரெஸ்டாரன்ட் ஆகியவையும் இந்த மைதானத்தில் அமைய உள்ளது.
முதல் இரண்டு ஸ்டேடியம்
உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத்தின் மொடேரா ஸ்டேடியத்தில் 1.10 லட்சம் இருக்கைகள் உள்ளன. அதற்கு அடுத்த பெரிய ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் ஸ்டேடியம். அங்கே 1.02 இருக்கைகள் உள்ளன.
350 கோடி
அவற்றுக்கு அடுத்த இடத்தில் 75,000 இருக்கைகளுடன் அமைய உள்ளது இந்த ஸ்டேடியம். முதற்கட்டமாக 45,000 இருக்கைகளும், இரண்டாம கட்டமாக 30,000 இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 350 கோடி செலவிட உள்ளதாக ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.