மோசமான பிட்ச்
பிட்ச் குறித்து பேசிய ஆர்ச்சர், முதல் டெஸ்டின் 5ம் நாளில் சென்னை பிட்ச் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான சர்பேஸாக இருந்தது. ஆரஞ்ச் கலரில், மண் பிளந்து வெளியே வந்து கொண்டிருந்தது. மிகவும் ஹார்டான சர்ஃபேஸ் இருந்ததால் இந்திய அணியை வெல்வது எங்களுக்கு எளிதாக போனது என தெரிவித்துள்ளார்.
ஆர்ச்சர் விலகல்
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றச்சாட்டு
முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. போட்டிக்கு பிறகு பேசியிருந்த கேப்டன் கோலி மற்றும் அஸ்வின், ஆடுகளம் குறித்தும் முதல் போட்டியில் பயன்படுத்தப்பட்ட எஸ்.ஜி பந்து குறித்தும் குற்றம் சாட்டினர்.
2வது டெஸ்ட்
முதல் டெஸ்ட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் சென்னையில் பிப்.13ம் முதல் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வீரர்களின் குற்றச்சாட்டுகள் சரிசெய்யப்படுமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.