சிறந்த ஆட்டம்
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்களை சேர்த்தனர். பின்னர் வந்த புஜாரா 8 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ரஹானே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இருவரும் சேர்ந்து 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.
மோசமான வானிலை
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2ம் நாள் ஆட்டம் திடீரென வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. காலை முதல் சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ஆட்டம் உணவு இடைவெளிக்கு பின்னர் 3 முறை போட்டி தடைபட்டு இறுதியில் 2ம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் தொடக்கத்திலேயே சிக்கலை சந்தித்துள்ளது.
3வது நாள்
இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிட்ச்-ல் ஈரப்பதம் நிறைந்து காணப்படுவதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தாமதமாகியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் பிட்ச்-ல் ஆய்வு நடத்தி முடிவை தெரிவித்த பின்னர் 3ம் நாள் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை
இன்றைய வானிலையை பொறுத்தவரை இங்கிலாந்து நேரப்படி காலையில் வானிலை ஓரளவிற்கு நன்றாக இருக்கும் என்றும், மதியத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டமும் பாதித்தால் ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.