பாக். வீரர்கள் ஆவேசம்
அந்த தோல்வியும், அவரது கொட்டாவியும் அகில உலக பேமசானது. இனி வரும் போட்டிகளில் ஜெயிக்காமல் போனால் செருப்படி என்று பாக். வீரர்களே பேசும் நிலை உருவானது. இந் நிலையில் பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அது குற்றமா?
அப்போது அவர் கூறியதாவது: கொட்டாவி வருவது இயல்பான ஒன்று. அதைத் தான் நான் செய்தேன். நான் இப்போது கொட்டாவிவிட்டது குற்றமா? ஏன் அப்படி எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
பணம் சம்பாதித்தனர்
கொட்டாவி விட்டதை தவிர எந்த பாவமும் செய்யவில்லை. என்னுடைய கொட்டாவி மூலம் சிலர் பணம் சம்பாத்தித்தால், நல்ல விஷயம்தான். என்னுடைய கொட்டாவி சிலருக்கு பணம் சம்பாதிக்க பயன்படுகிறது.
திருப்புமுனை பேட்டிங்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரிஸ் சோகைலின் ஆட்டம் ரொம்ப சிறப்பு. அணியில் சில மாற்றங்கள் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. சோகைல் கடைசி 15 ஓவர்களில் பேட்டிங் செய்த விதம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.
பீல்டிங் முன்னேற்றம்
பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். அதனை மேம்படுத்த பயிற்சிகள் எடுத்து வருகிறோம். ஏராளமான கேட்சுகளையும் கோட்டைவிட்டோம். அதை திருத்த வேண்டும். அடுத்து வரும் 3 போட்டிகளும் மிகவும் முக்கி்யமானது என்றார்.