லெஜெண்ட்ஸ் லீக் தொடர்
இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான முதல் குவாலிஃபையர் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பில்வாரா கிங்ஸ் மற்றும் இந்தியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பில்வாரா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சர்ச்சை
இந்நிலையில் இப்போட்டியில் காரசார சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பில்வாரா கிங்ஸ் இன்னிங்ஸின் போது யூசஃப் பதான் 24 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். மிட்செல் ஜான்சன் வீசிய 19வது ஓவரின் முதல் சில பந்துகளிலேயே 6,4,6 அடுத்தடுத்து விளாசினார். எனினும் ஜான்சன் 5வது பந்தில் யூசஃப் பதானின் விக்கெட்டை கைப்பற்றி பழிதீர்த்தார்.
கடுமையான சண்டை
விக்கெட்டை எடுத்தவுடன் யூசஃபை கோபமாக்கும் வகையில் ஜான்சன் *** ஆஃப் என அசிங்கமாக கூறினார். இதனால் அத்திரமடைந்த யூசஃப் பதான், ஜான்சனை நோக்கி கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டே சண்டைக்கு சென்றார். பதிலுக்கு ஜான்சனும் அவரை தள்ளிவிட, இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டையிட்டுக்கொண்டனர்.
கைகலப்பு?
ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு சென்றதும், கள நடுவர் குறுக்கிட்டு சமாதானப்படுத்தி வைத்தனர். எனினும் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முன்னாள் வீரர்களின் பழைய அதிரடியை காண வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அவர்களுடைய ஆக்ரோஷத்தையும் காண வேண்டியதாக மாறியுள்ளது.