மும்பை: இந்திய அணியின் சிறந்த கால்பந்து வீரர் மகேந்திர சிங் டோனி தான் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த உலகமும் ஆவலாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பற்றி தான் எண்ணிக்கொண்டிருக்கிறது. அதற்கு நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ?
விராட் கோஹ்லியும் கூட ஒரு சிறந்த கால்பந்து வீரர்தான். ஆனால் அவர் ஒருபோதும் கோல் அடித்தது இல்லை. ரோகித் சர்மா ஒரு ஆக்ரோஷமான கால்பந்து வீரர். அவர் பந்தை உதைத்து விட்டு நகராமல் அப்படியே இருப்பார். ஜாகீர் கான் கூட அதுபோல தான் என்று கூறியுள்ளார் யுவராஜ்சிங்.
ஆனால் உண்மையில் பாண்டியா ஒரு மிகபெரிய கால்பந்து விசிறி. சமீபத்தில் (ஜூன் 21) ,மான்சேஸ்டெர் யுனைடெட் அணி வீரர்கள் கையெழுத்திட்ட டி ஷிர்ட் அவருக்கு பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.