நாயகன் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். இடையே பல வெற்றி - தோல்விகள், காயங்கள், புற்றுநோய், டெஸ்ட் அணியில் இடம் மறுப்பு, பார்ம் அவுட், உலகக்கோப்பை நாயகன் என எல்லாவற்றையும் பார்த்து விட்டு, தற்போது அணியில் வாய்ப்பு இல்லாத நிலையில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
ஒரு கடைசி போட்டி
யுவராஜ் சிங் தன் ஓய்வு அறிவிப்பின் போது பேசுகையில், தான் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும், தனக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து வழி அனுப்ப பிசிசிஐ உறுதி அளித்தது. ஆனால், தான் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறாவிட்டால், வீட்டுக்கு செல்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.
பரபரப்பு
ஆனால், உண்மையில் யுவராஜ் சிங் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், ஒன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். அவர் பிசிசிஐ-யை குற்றம்சாட்டி இதை கூறவில்லை என்றாலும், இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியது.
|
ரோஹித் சர்மா பதிவு
இதற்கிடையே, இந்திய வீரர் ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பதிவில் உங்களுக்கு சிறந்த வழி அனுப்புதல் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்த, ரசிகர்கள் இதை "#YuviDeservesProperFarewell" என டிரென்டிங் செய்து வருகின்றனர்.