என்ன சிக்கல்
இது யுவராஜ் சிங்கிற்கு ஒரு வகையில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. யுவராஜ் சிங் தோனி இடையே பிரச்சனை இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது யோக்ராஜ் சிங் பேசி வருவதை பார்த்தால் உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையில் நிறைய பிரச்சனை நடந்து இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
என்ன அமைதி
ஆனால் யுவராஜ் சிங் இதுவரை இதுகுறித்த எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய அப்பா சொல்வது தவறு அல்லது சரி என்று யுவராஜ் சிங் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. தோனி மீது சுமத்தப்படும் களங்கம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு யுவராஜ் சிங் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார்.
செய்யவில்லை
யுவராஜ் சிங் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் இருந்த போதே சர்ச்சையானது. ஆனால் இந்திய அணி செமி பைனல் விளையாடிய போது, தோனி மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டு இருந்தார். அவரின் அனுபவம் அணிக்கு உதவும் என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டார்.
ஆனால் இப்போது
ஆனால் இப்போது அப்பாவின் கருத்துக்கு அவர் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கிறார். யுவராஜ் சிங் மேலும் இப்படி அமைதியாக இருக்க கூடாது. என்ன பிரச்சனை என்பதை அவர் உடைத்து பேச வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.