பும்ரா - யுவி சந்திப்பு
2007 மற்றும் 2011 உலகக்கோப்பை வெற்றிகளில் இந்திய அணியில் அளப்பரிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். அவரும் இன்று உலக அளவில் அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவும் இன்ஸ்டாகிராமில் நேரலை வீடியோவில் சந்தித்துக் கொண்டனர்.
வேறு மாதிரி மாறும் வீரர்கள்
அப்போது பேசிய யுவராஜ் சிங் இளம் வீரர்கள் சமூக வலைதளங்களில் வரும் போது வேறு மாதிரி மாறி விடுகிறார்கள் என்றார். அவர்கள் ரொம்ப கடுமையாக ஏதோ செய்ய முயற்சி செய்கிறார்கள் என நினைக்கிறேன் என்றார் யுவராஜ் சிங்.
டீசன்ட்டாக இருப்பார்கள் ஆனால்..
நான் பல வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் நேரில் நன்றாக (டீசன்ட்டாக) இருப்பார்கள். ஆனால், சமூக வலைதளத்தில் அவர்கள் வேறு ஏதோ மாதிரி, மாறி விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் சொல்வது யாரை என தெளிவாக தெரியவில்லை.
சாஹல் கோமாளித்தனம்
ஆனால், குறிப்பாக இப்போது இருக்கும் இளம் வீரர்களில் சாஹல் இதுபோலத் தான் நடந்து கொள்வதாக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் கூட கூறி இருக்கிறார்கள். சாஹல் டிக்டாக் சமூக வலைதளத்தில் கோமாளித் தனமாக வீடியோ பகிர்ந்து வருகிறார்.