ஓவரை நிறுத்திய ரோகித்
டி20 போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் எப்போதுமே விக்கெட்டுகளை வீழ்த்த பயன்படுத்துவார்கள். நேற்று ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பினரான ஆடம் சாம்பாவே தனி ஆளாக நின்று, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். ஆனால் சாஹலோ பந்துவீசும் அழகை பார்த்துவிட்டு ரோகித் சர்மா, ஒரு ஓவருடன் அவருக்கு நிறுத்திவிட்டார்.
சாஹலின் தவறு
ஐபிஎல் தொடரில் விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்கிய சாஹல், தற்போது அணியில் அவரது இடத்தை காப்பாற்ற போராடி வருகிறார். அதற்கு காரணம் சாஹல் தனது பந்துவீச்சில் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து வருகிறார். லெக் ஸ்பின்னர்கள் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றால், பந்தின் வேகத்தை குறைத்து வீச வேண்டும்.
சரி செய்வாரா சாஹல்
மேலும் பந்தை தூக்கி வீச கூடாது. அதாவது Flight செய்ய கூடாது. அப்படி வீசினால், அது பேட்ஸ்மேன்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இறங்கி வந்து அடித்துவிடுவார்கள். மேலும் லேக் ஸ்ப்பினரின் முக்கிய ஆயுதமான கூக்ளி பந்துகளை சாஹல் அதிகம் வீச வேண்டும். இதனை சரி செய்யாத வகையில் சாஹல் ஓவரில் ரன்கள் போக தான் செய்யும்.
சாஹல் நீக்கம்?
இந்த நிலையில், சாஹல் தொடர்ந்து சோபிக்க தவறி வருவதால், அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அஸ்வின் அல்லது ரவி பிஸ்னாயை அணியில் சேர்க்க டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் கூட சாஹல் அணியில் இடம்பெறுவது சந்தேகமே.