ஆர்சிபி -எஸ்ஆர்எச்
ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி சிறப்பான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகிறது.
2014ல் ஆர்சிபிக்காக தேர்வு
ஆர்சிபியின் முக்கிய பௌலராக உள்ளவர் யுஸ்வேந்திர சஹல். அது மட்டுமின்றி இந்திய அணியிலும் விராட் கோலியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவர். இந்நிலையில் கடந்த 2014ல் அவர் ஆர்சிபிக்காக தேர்வு செய்வதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3 சீசன்களில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
121 விக்கெட்டுகள்
இந்நிலையில் இன்றைய எஸ்ஆர்எச் அணிக்கு எதிராக தன்னுடைய 100வது போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் யுஸ்வேந்திர சஹல். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 121 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இதனிடையே ஒரே அணிக்காக தான் 100 போட்டிகளில் விளையாடுவேன் என்று எப்போதும் நினைத்து பார்த்ததில்லை என்று சஹல் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பாராட்டு
அவரது 100வது போட்டியையொட்டி அவக்கு பாராட்டு தெரிவித்துள்ள விராட் கோலி, இது அவருக்கு பெருமையான தருணம் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் அவர் ஆர்சிபியின் முக்கிய வீரராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் பல போட்டிகளின் சிறப்பான மாற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டீ வில்லியர்ஸ் பாராட்டு
சஹல் மிகவும் அருமையான கேரக்டர் என்றும், எல்லாரிடமும் நட்புடன் பழகுவார் என்றும் விராட் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது மிகவும் அரிதான கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார். அணியின் டீ வில்லியர்சும் சஹல் தன்னுடைய சகோதரர் போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.