சிட்னி : தன்னுடைய வருங்கால மனைவியுடன் தான் இருக்கும் செல்பி புகைப்படத்தை இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அழகான கடற்கரை பின்னணியில் இருவரும் அந்த புகைப்படத்தில் அழகாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில், அந்தப் புகைப்படம் தன்னுடைய கைவண்ணத்தில் அழகாக எடுக்கப்பட்டுள்ளதை கமெண்ட்டில் தனஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கூடிய விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ள நிலையில், இருவரும் இணைந்து பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் அழகான கடற்கரை பின்னோட்டத்தில் தனஸ்ரீயுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய காதலின் வெளிப்பாடாக இன்ஸ்டாகராமில் சஹல் பதிவிட்டுள்ளார். இதையடுத்து தன்னுடைய கைவண்ணத்தில் அந்த புகைப்படம் எவ்வளவு அழகாக உள்ளது என்று தனஸ்ரீ கமெண்ட் செய்துள்ளார்.