|
ஓய்வு அறிவிப்பு
வலதுகை பேட்ஸ்மேனான மசகாட்சா, 2001-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 சதங்கள், 42 அரை சதங்கள் உள்பட 9,410 ரன்கள் குவித்துள்ளார்.
தடை விதிக்கப்பட்டது
ஜிம்பாப்வே அணிக்கு சமீபத்தில் ஐசிசி விதித்த தடைக்குப் பின் சாலமன் மையர் ஓய்வு அறிவித்தார். இப்போது, மசகாட்சா அறிவித்துள்ளார். ஜூலையில் ஐசிசி கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
தேர்தல் இல்லை
அதன்படி, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான, ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தவில்லை. எனவே, அந்த அணியை சஸ்பெண்ட் செய்து, ஐசிசி போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஜிம்பாப்வே அணியிலும், நிர்வாகத்திலும் ஏற்கனவே பல கட்டங்களில் அரசியல் தலையீடு இருப்பதாக புகார்கள் இருந்தன. அணியில் வீரர்களை தேர்வு செய்வதிலும், அவர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பல முறைகேடுகள் நடந்ததாக ஐசிசி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது முக்கிய வீரர்களின் ஓய்வு அறிவிப்பு, அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.