ராஞ்சி : இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தன் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த ஐந்தாவது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர், இன்ஸ்டாகிராமில் தன் செல்ல மகள் ஸிவாவுடன், தோனியும் இடம்பெற்றுள்ள ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ஸிவா, "போய்.. அம்மா, அப்பா மாதிரி ஓட்டு போடுங்க.." என தன் பிஞ்சுக் சுட்டுவிரலை காட்டி மக்களை தங்கள் ஜனநாயக கடமையை செய்யுமாறு வலியுறுத்துகிறார்.
அருகே, தோனி தான் ஓட்டு போட்டதற்கான அடையாளமாக தன் சுட்டு விரலில் மையுடன் காட்சி அளித்தார். தோனி ஐபிஎல் தொடருக்கு இடையே தன் சொந்த ஊருக்கு சென்று ஓட்டுப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Voting this year has been so much more special with Sara and Arjun voting for the first time.
— Sachin Tendulkar (@sachin_rt) April 29, 2019
I urge you all to go out and VOTE too!#LokSabhaElections#GotInked@ECISVEEP pic.twitter.com/stUpabsZsg
மறுபுறம், சச்சின் டெண்டுல்கர் தன் குடும்பத்துடன் சென்று ஓட்டுப் போட்டுள்ளார். குறிப்பாக, அவரது மகள் சாரா மற்றும் மகன் அர்ஜுன் இருவருக்கும் இதுதான் முதல் ஓட்டுப் போடும் அனுபவம் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.