தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டிகளிலேய மிக மிக விறுப்பான, ஒரு பக்க போட்டியாக மாறிப் போனது இன்று நடந்த போர்ச்சுகல்- வட கொரியா இடையிலான போட்டி. அதி பயங்கரமாக ஆடிய போர்ச்சுகல் வீரர்கள் அடுத்தடுத்து 7 கோல்களை அடித்து வட கொரியாவை வாரிச் சுருட்டி விட்டனர். வட கொரியா வசம் பந்தே போகாமல் இந்தப் போட்டியை போர்ச்சுகல் வீரர்கள் தங்கள் வசம் முழுமையாக எடுத்துக் கொண்டு விட்டனர்.காலில் பட்ட பந்தெல்லாம் கோலுக்கே என்பது போல அவர்கள் ஆடிய அதி வேக ஆட்டத்தால் வட கொரியா நடுநடுங்கிப் போனது. இறுதி வரை வட கொரியாவால் ஒரு கோல் கூட போட முடியாமல் போய் விட்டது.முதல் கோல்...முதல் பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் வட கொரியா சிறந்த முறையில் தடுப்பாட்டத்தைக் கொடுத்தது. ஆனால் 29வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் மெரிலியஸ் அபாரமான கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார்.2வது கோல் ...இதையடுத்து 2வது பாதி ஆட்டத்தில், 53வது நிமிடத்தில் சிமாவோ அபாரமான கோலைப் போட்டார்.3வது கோல்...அடுத்த 3 வது நிமிடத்தில் அதாவது 56வது நிமிடத்தில், அல்மெய்டா இன்னொரு கோலைப் போட்டார். அத்துடன் நிற்கவில்லை போர்ச்சுகலின் கோல் மழை.4வது கோல் ...60வது நிமிடத்தில் டியாகோ இன்னொரு சிறப்பான கோலைப் போட்டார். 5வது கோல் ...81வது நிமிடத்தில் லீட்சன் அபாரமான கோலடித்தார்.6வது கோல்...87வது நிமிடத்தில் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ 6வது கோலடித்தார். கடந்த 2 ஆண்டுகளில் ரொனால்டோ அடித்துள்ள சர்வதேச கோலாகும் இது.7வது கோல்89வது நிமிடத்தில் ஸ்டார் வீரர் டியாகோ இன்னொரு அபாரமான கோலை அடித்து போர்ச்சுகல் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.இன்று போடப்பட்ட பெரும்பாலான கோல்களுக்கு வழிவகுத்த சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் 7 கோல்கள் அடித்து ஒரு அணி வெல்வது இது 10வது முறையாகும். மேலும் நடப்புத் தொடரில் ஒரு அணி அதிகம் போட்ட கோல்களும் இதுவேயாகும்.இன்றைய போட்டியை முழுமையாக போர்ச்சுகல் ஹைஜாக் செய்து விட்டது. பந்து வட கொரியா வசம் போகவே இல்லை. தனது முதல் போட்டியில் பிரேசிலுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்த வட கொரியா இன்றைய போட்டியில் போர்ச்சுகலிடம் மிகப் பரிதாபமாக தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வட கொரியா வெளியேறியது:இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் ஜி பிரிவில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். தொடர்ந்து 2 போட்டிகளில் வட கொரியா தொடரை விட்டு வெளியேறி விட்டது.பிரேசில் ஏற்கனவே நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறி விட்டது. தற்போது போர்ச்சுகல் அணியும் நாக் அவுட் ரவுண்டுக்கு வந்து விட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கோலே அடிக்காமல் வறுமையில் வாடி வந்த ரொனால்டோ இன்றைய போட்டியில் பிரமிக்க வைக்கும் வகையில் அட்டகாசமாக ஆடினார். பல கோல்கள் கிடைக்க வழி வகுத்ததோடு கடைசியில் அவரும் ஒரு கோலடித்துக் கொண்டார்.ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்ச கோல்களை அடித்த வரலாறு ஹங்கேரி அணியிடம்தான் உள்ளது. இதுவே உலக சாதனையாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித் தொடரின் சுற்றுப் போட்டியில் எல் சால்வடார் அணியை 10-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஹங்கேரி. இதுவே இதுவரை உள்ள உலக சாதனையாகும்.