3வது இடத்தில் பெங்களூரு எப்சி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் புள்ளிகள் பட்டியலில் 18 போட்டிகளில் விளையாடி 30 புள்ளிகளுடன் பெங்களூரு எப்சி 3வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக ப்ளே-ஆப் சுற்றிற்கு இந்த அணி தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் இடைக்கால கோச்சாக நவ்சத் மூசா செயல்பட்டு வந்தார்.
ஜெர்மனை சேர்ந்த புதிய கோச்
இந்நிலையில் தற்போது ஜெர்மனை சேர்ந்த இத்தாலியர் மார்கோ பெசாயுயோலி பெங்களூரு எப்சி அணியின் புதிய தலைமை கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 2023 -24 வரையில் இவர் அணியின் தலைமை கோச்சாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெசாயுயோலி மகிழ்ச்சி
வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறவுள்ள ஏஎப்சி கோப்பை தொடரில் இவர் அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய இந்த பொறுப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மார்கோ பெசாயுயோலி அணியை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.
இந்திய புட்பால் வளர்ச்சிக்காக செயலாற்றுவேன்
இவர் ஜெர்மனியின் பன்டஸ்லிகாவின் தொழில்நுட்ப இயக்குநராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னுடைய அனுபவத்தை கொண்டு இந்திய அணியின் புட்பால் வளர்ச்சிக்காக தான் சிறப்பாக செயல்படுவேன் என்றும் மார்கோ பெசாயுயோலி தெரிவித்துள்ளார்.