48வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 48வது போட்டி இன்றிரவு கோவாவின் படோர்டாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் மும்பை சிட்டி எப்சி அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்சி அணியுடன் மோதவுள்ளது.
முதலிடத்திற்கு தீவிரம்
தற்போது ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது மும்பை சிட்டி அணி. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் மீண்டும் முதலிடத்திற்கு தாவும் முனைப்பில் அந்த அணி உள்ளது. முதலிடத்தில் மோஹுன் பகன் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலையற்ற போட்டிகள்
இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது பெங்களூரு எப்சி அணி. கடந்த சீசனை கைப்பற்றிய இந்த அணி இந்த தொடரில் நிலையான போட்டிகளை தவறியுள்ளது. முதல் 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்துள்ள இந்த அணி, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை தழுவியுள்ளது.
மும்பை சிட்டி தீவிரம்
இந்நிலையில் இந்த சீசனில் தன்னுடைய முதல் டைட்டிலை வெற்றி கொள்வதற்கு மும்பை சிட்டி அணி தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது மும்பை சிட்டி அணி. இன்றைய போட்டி மும்பை சிட்டிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.