105வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 105வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. மும்பை சிட்டி எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 கோல்களை அடித்து மும்பை சிட்டி எப்சி அதிரடி வெற்றி பெற்றுள்ளது.
இறுதியில் ஒடிசா எப்சி
மும்பை சிட்டிக்கு எதிராக விளையாடிய ஒடிசா எப்சி அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் டியாகோ மௌரிசியோ அணிக்காக ஒரு கோலை அடித்தார். நேற்றைய போட்டியின் தோல்வியை அடுத்து அந்த அணி இந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் இறுதியிலேயே உள்ளது.
தொடரின் முதல் ஹாட்ரிக்
மாறாக நேற்றைய போட்டியில் மும்பை சிட்டி எப்சியின் நட்சத்திர வீரர் பிபின் சிங் அடுத்தடுத்து 38, 47 மற்றும் 86வது நிமிடங்களில் கோல்களை அடித்து அசத்தினார். பிபின் சிங் அடித்துள்ள முதல் ஹாட்-ட்ரிக் கோல் இதுவாகும். மேலும் இந்த தொடரிலும் யாரும் இதுவரை இந்த சாதனையை மேற்கொள்ளவில்லை.
அதிரடி வெற்றி
மேலும் மும்பை சிட்டியின் பார்த்தோலோமியோ கோட்டார்ட் ஆகியோர் அடித்த கோல்களும் இணைந்து 6 கோல்களை மும்பை சிட்டி அணிக்கு சேர்த்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது இடத்தில் சிறப்பாக உள்ளது அந்த அணி. வரும் ஞாயிற்றுக்கிழமை முதலிடத்தில் உள்ள மோஹுன் பகன் அணியுடன் மோதவுள்ள நிலையில் அந்த போட்டியில் வெற்றி பெற்றால் வின்னர்ஸ் கோப்பையை வெற்றி கொள்ளலாம். மேலும் முதலிடத்திலும் இந்த தொடரை நிறைவு செய்யலாம்.