42வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 42வது போட்டி இன்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 7வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி அணி 2வது இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் மோதவுள்ளது.
3வது வெற்றிக்கு தீவிரம்
இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னையின் எப்சி தன்னுடைய 3வது வெற்றியை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இடம்பெற அந்த அணி தீவிரமாக உள்ளது.
குறைந்தது 2 கோல்கள்
இந்த திட்டத்தை செயல்படுத்த ஏடிகே மோஹுன் பகன் அணியை இன்றைய போட்டியில் வெற்றி கொள்வது மட்டுமின்றி 2 கோல்களையாவது அந்த அணி அடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனிடையே, இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள மோஹுன் பகன் அணி ஒரு தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.
பரபரப்பான போட்டி
இந்நிலையில் இன்றைய போட்டியை சோனி டென் நெட்வொர்க் மற்றும் சோனி லைவ்வில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி துவங்கவுள்ளது. மிகுந்த பரபரப்பான ஆட்டத்தை இன்றைய போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.