லிஸ்பான் : வரும் ஞாயிறு அன்று சாம்பியன்ஸ் லீக் 2020 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் - பேயர்ன் முனிக் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியல் மாட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.
பாரிஸ் அணி தன் முதல் இறுதிப் போட்டியில் ஆட உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன் முனிக் அணி இதுவரை ஆறு ஐரோப்பிய கோப்பைகளை வென்றுள்ள நிலையில் தன் ஆறாவது கோப்பையை எதிர்கொண்டு உள்ளது.
2020 சாம்பியன்ஸ் லீக் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டது. கடைசி எட்டு அணிகளுக்கான போட்டிகள் லிஸ்பானில் நடந்தது.
இந்த இரண்டு அணிகளும் தங்கள் நாடுகளில் 2018-19 சீசனின் உள்ளூர் சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றில் பேயர்ன் முனிக் 18 புள்ளிகளை பெற்று இருந்தது. அந்த சுற்றில் மட்டும் 24 கோல்கள் அடித்து மிரட்டியது.
இவர் இருக்குற வரைக்கும் நைட் ரைடர்ஸ்-ஐ தொடக்கூட முடியாது.. செம அடி வாங்கிய ஜமைக்கா!
அதே போல பாரிஸ் அணி தன் குரூப்பில் இடம் பெற்று இருந்த ரியல் மாட்ரிட் அணியுடன் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
பேயர்ன் முனிக் அணிக்கு இது 11வது இறுதிப் போட்டி ஆகும். கடந்த 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி தான் இறுதிப் போட்டியிலும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மறுபுறம் தன் முதல் இறுதிப் போட்டியில் ஆடும் பாரிஸ் அணி வென்றால் அது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய திருப்புமுனையாக இருக்கும்.