சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1-1 என்ற டிரா செய்து, புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி முதலிடத்தைப் பிடித்தது. ஆனாலும் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்ததால், 2 புள்ளிகளையும் இழந்தது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில், சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.